×

புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி தாலுக்கா புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்டம் நடக்க உள்ளது.
அது சமயம் அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள். எனவே, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக அளிக்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.


Tags : village ,New Gummidipondi ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...