×

மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக நிர்வாகி கைது: கட்சியில் இருந்தும் நீக்கம்

ஜெய்ப்பூர்: மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக நிர்வாகி உஸ்மான் கனியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரை கட்சியில் இருந்தும் பாஜக தலைமை நீக்கியுள்ளது. ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இவ்விகாரம் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக சிறுபான்மை பிரிவு உஸ்மான் கனி என்பவர், மோடியின் முஸ்லிம் விரோத வெறுப்புப் பேச்சு குறித்து சமீபத்தில் விமர்சித்தார்.

அதனால் பாஜக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாக கூறி உஸ்மான் கனியின் மீது மாநில பாஜக தலைவர் ஓங்கர் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார். அதானது பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உஸ்மான் கனி ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி, உஸ்மான் கனியை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக உஸ்மான் கனி கூறுகையில், ‘ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சை நானும் கேட்டேன். ஒரு முஸ்லீம் என்ற முறையில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மோடியின் கருத்துகளால் ராஜஸ்தானில் பாஜக பின்னடைவை சந்திக்கும்’ என்றார்.

The post மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக நிர்வாகி கைது: கட்சியில் இருந்தும் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi ,Jaipur ,Usman Gani ,Muslims ,Rajasthan ,
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...