×

அரசியலில் ஈடுபடலாம் என்பதால் லாலுவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

புதுடெல்லி:  ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரூ.900 கோடி கால்நடை தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். தற்போது, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சாமுண்டா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தனது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் கேட்டு அவர் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர், ஜாமீன் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன் கடந்த வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் லாலுவிற்கு ஜாமீன் வழங்குவது குறித்து சிபிஐ பதில் தாக்கல் செய்யும்படி கூறியிருந்தனர்.

இந்நிலையில் லாலுவின் ஜாமீன் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் லாலுவிற்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், ‘லாலு 8 மாதமாக கட்டண சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரை சந்தித்தவர்களின் பட்டியல் உள்ளது. தற்போது மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால்,  ஜாமீன் வழங்கினால் அவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது’  என்று தெரிவிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Laloo ,CBI , Lalu, CBI,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான...