×

விமானத்தில் டெல்லிச் சென்ற அபிநந்தனின் பெற்றோருக்கு எழுந்து நின்று கைதட்டியபடி சக பயணிகள் உற்சாக வரவேற்பு

டெல்லி : இந்திய விமானி அபிநந்தனை வரவேற்பதற்காக புறப்பட்டுச் சென்ற அவரின் பெற்றோரை சக விமான பயணிகள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், இன்று பிற்பகலில் அவர் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

அவரை வரவேற்க அபிநந்தனின் தந்தை ஒய்வு பெற்ற ஏர் மார்ஷல் வர்தமான் மற்றும் தாய் டாக்டர் ஷோபா வர்தமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தங்களுடன் விமானத்தில் பயணம் செய்ய போவது குறித்து அறிந்த சக பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அபிநந்தனின் தாயும் தந்தையும் விமானத்தில் ஏறியது முதல் அவர்கள் இருக்கைக்கு சென்று அவரும் வரை அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். அந்த விமானம் டெல்லியை அடைந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து அமிர்தசரஸ் புறப்பட்டுச் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,parents ,Delhi ,Abhinanthan , Pilot, Abhinandan, Pakistan, air travelers
× RELATED டெல்லி – வாரணாசி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்