×

இந்தியா எதற்காகவும் யாருக்காகவும் அடிபணியாது : பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடிக்கு பிறகு பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : நமது விமானப்படையினரின் துணிச்சலான தாக்குதல்களால் எதிரிகள் நிலைகுலைந்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி : 300 தீவிரவாதிகள் பலி


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 14ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையினர் இன்று அதிகாலை குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.

12 போர் விமானங்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாலாகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதின் ஆகிய பயங்கரவாதி முகாம்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெய்ஸ்-இ-முகமது இயக்க கட்டுப்பாட்டு அறையும் அழிக்கப்பட்டது. பாலாகோட் பகுதியில் இந்திய விமானப்படை நிகழ்த்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா எதற்காகவும் யாருக்காகவும் அடிபணியாது : பிரதமர் மோடி

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் சுரூ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்திய விமானப்படையின் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு தலைவணங்குவதாக கூறினார். நாட்டிற்கு எதிரான எந்த செயலையும் இந்தியா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று அவர் கூறினார்.

நாடு பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்த அவர், நாட்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் இந்தியா எதற்காகவும் யாருக்காகவும் அடிபணியாது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவை ஒருப்போதும் தலைகுனிய விட மாட்டேன் என்றும் தெரிவித்தார். நமது விமானப்படையினரின் இந்த துணிச்சலான தாக்குதலால் எதிரிகள் நிலைகுலைந்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Modi ,anyone ,reaction ,talks ,Pakistan , Prime Minister Modi Advisory, Pakistan, Air Force, Terrorists
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி