×

விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “விருதுநகர் அருகே வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

வெடிவிபத்தில் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தோரின் வாரிசுகளுக்குத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Virudhunagar ,K. Stalin ,Chennai ,Election Commission ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...