இதை பார்த்த மற்றொர் டிரைவர் டேவிட் சாமுவேல் காரை நிறுத்திவிட்டு வந்து மகாவீரை தடுத்துள்ளார். அப்போது, சாமுவேலுக்கும் அடி விழுந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் சக டிரைவர்களுக்கு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த மற்ற கால்டாக்சி டிரைவர்கள் கார்களை வேளச்சேரி மெயின் சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதில் பயந்துபோன காவலர் மகாவீர் அங்கிருந்து நழுவ பார்த்தார். ஆனால் அவரை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டு தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு தென் சென்னை இணை கமிஷனர் மகேஷ்வரி வந்து கார் டிரைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.இதையடுத்து காவலர் மகாவீரர் மது அருந்தி இருப்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.