×

சட்டவிரோதமாக மீன்பிடித்த 8 பேர் கைது

சாம்ராஜ்நகர்: சட்ட விரோதமாக காவிரி நதிப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் 8 பேரை கைது செய்த வனத்துறை போலீசார் அவர்களிடமிருந்து 5 படகுகள், வலைகள் ஆகியவற்ைற பறிமுதல் செய்தனர். கொள்ளேகால் தாலுகா கொத்தனூரு வனப்பகுதியையொட்டிய காவிரி நதிப்பகுதியில்  படகில் சென்று வலை விரித்து சட்டவிரோதமாக சிலர் பிடித்துக்கொண்டிருந்தனர். தகவலறிந்த வனத்துறை போலீசார் காவிரி நதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கொள்ளேகால் தாலுகா ஜாகேரி கிராமத்தை சேர்ந்த அருள்ராஜ், சின்னப்பா, அமல் ஜெயராஜ், பீட்டர், பெரியநாயகம், ஜான் போஸ்கோ, பெரிய நாயகம்மா, ஜோதிபிரியா ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 படகுகள், மீன் பிடிக்க பயன்படுத்திய வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சட்டவிரோதமாக மீன்பிடித்த 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Samrajnagar ,Cauvery ,Dinakaran ,
× RELATED மேலாண்மை ஆணையத்தை கண்டித்து...