மதுரை : மரங்களில் விளம்பர பலகை வைக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த பவானி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி