×

ஆகாஷ் மருத்துவமனை புதிய கிளை திறப்பு

கீழ்ப்பாக்கம்: வடபழனி நூறடி சாலையில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை மருத்துவமனை நிர்வாகம், கோட்டூர்புரம் ரயில் நிலையம் எதிரில் ஆகாஷ் பன்நோக்கு மருத்துவமனை என்ற பெயரில் புதிய கிளையை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது.  வசந்த் அன்கோ உரிமையாளர் எச்.வசந்தகுமார் தலைமை வகித்து, மருத்துவமனையை திறந்து வைத்தார். பெண்களின் பாலியல் பிரச்னைக்கு தீர்வு காணும் அதிநவீன கருவியான பெமிலிப்ட் என்ற புதிய லேசர் கருவியை நடிகர் பாண்டியராஜன் இயக்கி வைத்தார்.  விழாவில் காவல்துறை அதிகாரிகள், கடலோர காவல்படை ஐஜி பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை துணை இயக்குநர் ராதிகா, சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறை பேராசிரியர் சுமதி  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில், ஆகாஷ் பன்னோக்கு மருத்துவமனை இயக்குனர்கள் காமராஜ், ஜெயராணி காமராஜ் பேசியதாவது:  பெண்களின் பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முதல்முறையாக பெமிலிப்ட் என்ற கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன லேசர் கருவியின் மூலம் சிகிச்சை பெற்றவுடன் கொலீஜியன் திசுக்கள் புத்துணர்வு பெற்று சுரக்க ஆரம்பிக்கின்றன. இந்த சிகிச்சையால் வலியோ, மயக்க மருந்தோ தேவை இல்லை. வெளிப்புற நோயாளியாகவே சிகிச்சை பெறலாம். கட்டணம் மிகக்குறைவு. இவ்வாறு அவர்கள் பேசினர். இந்த மருத்துவமனையில நேற்று முதல் 3 நாட்கள் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aakash Hospital ,branch opening , Aakash Hospital , branch opening
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா