சென்னை: மோடி தன் மீதான எதிரிபார்ப்பை நிறைவேற்றவில்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் காங். கூட்டணி அலை வீசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை ராயபேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர், சந்திரபாபு நாயுடு ஏற்கனவே மத்தியில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட அமைப்பாளராக செயல்பட்டவர் எனக் கூறினார். இதைத்தொடர்ந்து 5 மாநில பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும் என கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி