×

மக்கள் குறைகளை தீர்த்துள்ளேன்: தா.மோ.அன்பரசன் பிரசாரம்

ஆலந்தூர்: ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நேற்று நங்கநல்லூர், பழவந்தாங்கல் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருடன்  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத், ஆலந்தூர்  பகுதி திமுக செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன் சிபிஎம் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ் ஆகியோர் உடன் சென்றனர். பிரசாரத்தின்போது தா.மோ அன்பரசன் பேசுகையில்,  ‘நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் பல்வேறு பணிகளை நிறைவேற்றி தந்துள்ளேன். கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது ஓடோடி சென்று உதவிகள் செய்தேன்.  நலச் சங்கங்கள் மற்றும் பொதுமக்களை அவ்வப்போது  சந்தித்து  குறைகளை கேட்டு நிறைவேற்றி தந்துள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தையும் பெற்று தருவேன். எனவே, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார்.மாவட்ட பொருளாளர் எம்எஸ்கே இப்ராகிம்,  மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராம்,  மார்த்தாண்டம், இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், பகுதி துணை செயலாளர் மு.சத்யா, ஜி.கே.ரவி, வட்ட செயலாளர்கள் ஜி.நடராஜன்,  கே.ஆர்.ஜெகதீஸ்வரன்,  ஆர்.வரதராஜன், யேசுதாஸ், சாலமோன், பகுதி பொருளாளர் உலகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் வெள்ளைச்சாமி, செல்வம், கேபிள் ராஜா, ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் பொறுப்பாளர் ஆதம் ரமேஷ்,  இரா.ஜோதி, சிக்கந்தர், கோவிந்தராஜ், தனசேகரன் நேரு, ரோஜா, செல்வம்,  ராதாகிருஷ்ணன்,  சபீக் அகமது, மணிவண்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் ப.சுப்பிரமணி, பகுதி செயலாளர்  கத்திப்பாரா சின்னவன், கராத்தேபாபு, விடுதலை சிறுத்தைகள் பகுதி செயலாளர் சீராளன் ஆகியோர் உடன் சென்றனர்….

The post மக்கள் குறைகளை தீர்த்துள்ளேன்: தா.மோ.அன்பரசன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Tha.Mo.Anparasan Prasaram ,Alandur ,DMK ,Mo. Anparasan ,Nanganallur ,Palavanthangal ,Tha.Mo ,.Anparasan ,Dinakaran ,
× RELATED சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய்...