×

பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கினார்

ஆலந்தூர்: சென்னை தெற்கு மாவட்டம், வேளச்சேரி மேற்கு பகுதி 175வது (அ) வட்ட திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா ஆதம்பாக்கம் மோகனபுரி 1வது தெருவில் நடைபெற்றது. வட்ட செயலாளர் வி.சக்திவேல் தலைமை வகித்தார். மேற்கு வேளச்சேரி பகுதி திமுக செயலாளர் அரிமா சு.சேகர் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் தஞ்சை கூத்தரசன், சேப்பாக்கம் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில், மாநகராட்சி கவுன்சிலர்கள் எஸ்.பாஸ்கரன், வே.ஆனந்தன், மகேஸ்வரி முருகவேல், கழக ரமேஷ், சி.பழனி, எம்.எ.சங்கர், எழில்வாணன், தில்லி குமார், மைதிலி, வட்ட செயலாளர்கள் பாரதிதாசன், மதிவாணன், முருகவேல், தாமோதரன், சதீஷ், பார்த்திபன், கோபி, ஜெ.சித்தாபதி, கே.ஆர்.பி.பாண்டியன், ஆர்.ரமேஷ், நா.முருகன், அலெக்ஸ் வி.வேல்முருகன், து.அரசு, எஸ்.பாலாஜி, பெ.கண்ணன், ஆர்.நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

The post பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Centenary ,Alandur ,Chennai South District, Velachery West Region 175th (a ,District DMK ,Prof. ,Anbazhakan ,Dinakaran ,
× RELATED சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய்...