- இந்தியா
- சென்னை
- டாக்டர்
- அகர்வால்ஸ்
- பிராந்திய மருத்துவ இயக்குனர்
- கண் மருத்துவமனை
- ஆர்.சலதேவி சதீஷ்
- தின மலர்
சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் கூறியதாவது.கண்விழி விறைப்பு நோய் வராமல் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாத இந்த நோயால் பார்வைத்திறனிழப்பு வராமல் தடுக்க ஒரே வழிமுறை, ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது. 2021 மார்ச் 7 முதல் 13 வரை அனுசரிக்கப்படும் உலக கண்விழி விறைப்பு நோய் வாரத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி குறிப்பில், 1.6 மில்லியன் குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 40 மில்லியன் பேர், பார்வைத்திறனற்றவர்களாக அல்லது பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். 90% நோயறிதல் செய்யப்படாத கண் விழி விறைப்பு நோயாளிகளை இந்தியா அதிகளவு கொண்டிருக்கும், என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் பார்வைத்திறனிழப்புக்கான 3வது முன்னணி காரணமாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது. இந்த நோய் அதிக சிக்கலானது மற்றும் ஆபத்தானது. இது கண்புரையைபோல் அல்லாமல், சிகிச்சையில்லாமல் சரிசெய்து முந்தைய நிலையை கொண்டுவர இயலாது. போதுமான அளவு சிகிச்சை அளிக்கப்படாத நோயாக இருக்கிறது.குடும்பத்தில் கண்விழி விறைப்பு நோய் இருந்த வரலாறு, நீரிழி உள்ளவர்கள், 40 வயதுக்கு மேற்பட்டோர், ஒளிக்கதிர் விளக்க குறைபாடுள்ளவர்கள், ஸ்டெராய்டு மருந்துகள், கண் சொட்டு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் இன்ஹேலர்கள் மற்றும் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் ஆண்டுதோறும் கண்விழி விறைப்பு நோய் பரிசோதனை செய்ய வேண்டும்.உரிய காலத்தில் தவறாமல் கண் பரிசோதனை செய்ய மக்களை ஊக்குவிப்பதன் மூலம் கண்விழி விறைப்பு நோயை முற்றிலுமாக ஒழித்து, உலக கண்விழி விறைப்பு நோய் வாரம் அனுசரிக்கப்படுவதன் முக்கிய குறிக்கோளாகும், என்றார்….
The post 90% நோயறிதல் செய்யப்படாத கண் விழி விறைப்பு நோயாளிகளை இந்தியா அதிகளவு கொண்டிருக்கும்: நிபுணர்கள் தகவல் appeared first on Dinakaran.