×

அம்பையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

அம்பை: அம்பை பகுதியை சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் அம்பை  கோவில் குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் வடிவேல் மணி கண்டன்(26), இவர் அடிதடி, திருட்டு மற்றும் கொலைமுயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணனிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து எஸ்.பி  பரிந்துரையின் படி, கலெக்டர்  விஷ்ணு உத்தரவின் பேரில் வடிவேல் மணிகண்டன் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்….

The post அம்பையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Arrow ,Paddy District ,Temple Pond Area ,Dinakaran ,
× RELATED நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட்: ஆட்சியர் அறிவுறுத்தல்