×

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை காலால் மிதித்து சேதப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்: ஐசிசி விசாரணை நடத்த வலியுறுத்தல்!!

லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 4ம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி வீரர்கள் மார்க் வுட் , ரோரி பர்ன்ஸ் காலால் பலமுறை பந்தை மிதித்துள்ளனர்.இதனால் பந்தின் தன்மை மாறி ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பந்தை காலால் மிதித்து சேதப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்களை வுட் வீழ்த்தியுள்ளார்.மைதானத்தில் பந்தை வீரர்கள் சேதப்படுத்திய போது நடுவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு விமசகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும் இது தொடர்பாக ஐசிஐசிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. …

The post இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை காலால் மிதித்து சேதப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்: ஐசிசி விசாரணை நடத்த வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : England ,match ,India ,ICC ,London ,Lord's Stadium ,Dinakaran ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்