×

துப்பாக்கி சுடுதலில் ஏமாற்றம்

இன்று காலை நடந்த மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்று போட்டியில் இந்தியா சார்பில் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சீரிஸ், ஒரு சீரிஸ்க்கு 10 சுடுதல் என மொத்தம் 60 முறை சுடுதல் வேண்டும். ஒரு முறை இலக்கை துல்லியமாக சுட்டால் 11 புள்ளிகள் வழங்கப்படும். யஷாஸ்வினி 1 முதல் 6 சீரிஸில் முறையே 94, 98, 94, 97, 96, 95 புள்ளிகள் பெற்றார். மொத்த புள்ளிகள் 574 பெற்ற யஷாஸ்வினி 13ம் இடத்தையே பிடித்தார்.  மற்றொரு வீராங்கனை மானு பாகெர்  57512ம் இடம் பிடித்தார். முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தனர். மானு பாகெர், துப்பாக்கியில் முதலில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் 5 நிமிடம்  தவித்தது குறிப்பிடத்தக்கது….

The post துப்பாக்கி சுடுதலில் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : 10m ,India ,Dinakaran ,
× RELATED எப்.சியும் எடுக்கவில்லை சைரன் இல்லாத...