×

திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை

பெரம்பூர்: சென்னை பெரம்பூர், நீலாந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (21). இவரது மனைவி கீர்த்தனா (20). காதலித்துவந்த இவர்கள் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி திருமணம் செய்துகொண்டநிலையில், தம்பதி இடையே கருத்த வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. கடந்த 15ம் தேதி ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக விரக்தியடைந்த  கீர்த்தனா, மரச்சாமான்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் செல் ஆயிலை குடித்து மயங்கிவிழுந்தார். அவரை உடனடியாக மீட்டு, கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீர்த்தனா, நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, திருவிக. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது….

The post திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Ramachandran ,Nilanthottam, Perambur, Chennai ,Kirtana ,
× RELATED நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால்...