×

அம்பேத்கருக்கு திருநீறு இட்டு அவமதித்ததற்கு கடும் கண்டனம்: சென்னையில் கொட்டும் மழையில் திருமாவளவன் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: அம்பேத்கருக்கு திருநீறு இட்டு அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். திருவள்ளுவர், பெரியாரை தொடர்ந்து அம்பேத்கருக்கும் திருநீறு இட்டு அவமதிப்பு செய்த சங்பரிவார் சனாதன அமைப்புகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கொட்டும் மழையிலும் பங்கேற்று உரையாற்றினார். இந்துத்துவா என்பது பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் அரசியல் விளையாட்டு என்று அவர் விமர்சித்தார். இந்து தேசியவாதத்தை இந்தியாவில் கட்டமைப்பதற்காக உருவாக்கிய புதிய கோட்பாடே இந்துத்துவா என்று சாடிய திருமாவளவன், கொள்கை யுந்திரம் உள்ளவர்கள் அம்பேத்கர் சிலைக்கு ஏன் மாலைபோட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர். சனாதன, சங்பரிவார் அமைப்புகளை கண்டித்து அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர். …

The post அம்பேத்கருக்கு திருநீறு இட்டு அவமதித்ததற்கு கடும் கண்டனம்: சென்னையில் கொட்டும் மழையில் திருமாவளவன் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Thirumavalavan ,Chennai ,Vichittu Tigers Party ,Thol Thirumavalavan ,
× RELATED அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்...