கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய நடிகர் மிலிந்த் சோமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன், வித்தகன் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். தெலுங்கிலும் நடித்துள்ளார். இவர் தனது 55வது பிறந்த நாளை கோவாவில் சமீபத்தில் கொண்டாடினார். அப்போது கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடினார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருந்தார்.
இதற்கு நெட்டிசன்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கோவா சுரக்ஷா மன்ச் என்ற அமைப்பு போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து பிரிவு 294ன் படி மிலிந்த் சோமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.