×

முதல் மகனை கைவிட துணிந்த சமீரா

வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமான சமீரா ரெட்டி, அசல், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு பட வாய்ப்பில் லாமல் மும்பை புறப்பட்டு சென்று இந்தி படங்களில் வாய்ப்பு தேடினார். ஒன்றிரண்டு படங்களுக்கு மேல் வாய்ப்பு வரவில்லை. பிறகு அக்‌ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். நடிப்புக்கு முழுக்கு போட்டவர், ஹன்ஸ், நைரா என இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார்.

சமீப காலமாக மற்றவர்களுக்கு நம்பிக்கை தரும்படியான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அவரது பேச்சில் நேர்மை வெளிப்படுவதால் ரசிகர்களும் அதனை வரவேற்று வருகின்றனர். தனக்கு முதல் குழந்தை பிறந்தபோது உடல் எடை அதிகரித்திருந்தது பற்றி அவர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை அளித்திருக்கிறது. தனக்கு பிறந்த மகனை ஏற்க மறுத்ததுபற்றிய விவரத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஹன்ஸ் பிறந்தபோது நான் முற்றிலும் அவனிடமிருந்து பிரிந்திருந்தேன். அவன் யார் என்றே எனக்கு தெரியவில்லை. என் கணவரின் கையில் அந்த குழந்தையை கொடுத்துவிட்டு, ‘இது எனக்கு பிடிக்கவில்லை. இந்த குழந்தையை தயவு செய்து எடுத்துச் சென்றுவிடுங்கள் என்றேன். நான் செய்த மிகப் பெரிய தவறு இதுதான். இன்றைக்கு அந்த நிலைமை இல்லை. அதிலிருந்து மீண்டு விட்டேன். அன்றைய நாட்களில் என்ன நடக்கிறது என்பது தெரிவதற்கே எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது’ என்றார்.

Tags : Sameera ,
× RELATED நள்ளிரவில் பசியில் அழுதபோது 2 மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது