×

அபிராமபுரத்தில் சொத்து தகராறில் பெரியப்பாவை கொன்ற வாலிபர் கைது: நண்பர்களுக்கு வலை

சென்னை: அபிராமபுரம் பகுதியில் சொத்து தகராறில் பெரியப்பாவை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, அபிராமபுரம், குருபுரம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் அபிராமபுரம் பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். பொன்ராஜூக்கும் அவரது மனைவியின் தங்கை மகன் அற்புதராஜூக்கும் தூத்துக்குடியில் உள்ள சொத்து தொடர்பாக சில வருடங்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை பொன்ராஜ் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அற்புதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் பொன்ராஜிடம் சொத்து சம்பந்தமாக தகராறு செய்துள்ளனர். பிறகு ஆத்திரமடைந்த அற்புதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் பொன்ராஜை குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து பொன்ராஜின் மருமகன் மோகன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையை சேர்ந்த அற்புதராஜ் (31), கொலை செய்தது தெரியவந்தது. அதன்படி அற்புதராஜை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். அவருடைய தாய்க்கு உரிய பூர்வீக சொத்தை பிரித்து தராமல் பெரியப்பா பொன்ராஜ் காலம் தாழ்த்தி வந்ததால் ஆத்திரமடைந்த அற்புதராஜ் நண்பர்களுடன் சேர்ந்து  கொலை செய்துள்ளது தெரியவந்தது. மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி உள்ள நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். …

The post அபிராமபுரத்தில் சொத்து தகராறில் பெரியப்பாவை கொன்ற வாலிபர் கைது: நண்பர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Periyappa ,Abhiramapuram ,CHENNAI ,
× RELATED பெரியப்பாவை கொன்றது ஏன்?