×

பெரியப்பாவை கொன்றது ஏன்?

புவனகிரி, மே 8: பரங்கிப்பேட்டை அருகே உள்ளது மேலகுப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(65). இவருக்கும், இறந்துபோன இவரது தம்பி குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்துள்ளதாகவும், அப்போது அங்கு வந்த அவரது தம்பி மகன் ஆனந்தராஜ்(27) என்பவர் மாரிமுத்துவை ஆபாசமாக திட்டி உள்ளார் அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த மாரிமுத்துவின் தம்பி மகன் ஆனந்தராஜ் (27) என்பவர் மண்வெட்டி காம்பை எடுத்து மாரிமுத்துவை தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆயிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் மாரிமுத்துவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பெரியப்பாவை அடித்து கொலை செய்த ஆனந்தராஜை பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெர்மின்லதா தலைமையிலான போலீசார் கைது செய்து அவர் கொலை செய்வதற்கு பயன்படுத்திய மண்வெட்டி காம்பை பறிமுதல் செய்தனர். அவரிடம் கொலை நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்தராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், இறந்துபோன மாரிமுத்துவின் குடும்பத்திற்கும், ஆனந்தராஜ் குடும்பத்திற்கும் இடப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்றும் இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது. அப்போது ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் அருகில் கிடந்த மண்வெட்டி காம்பால் தனது பெரியப்பாவின் தலையில் தாக்கி கொலை செய்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

The post பெரியப்பாவை கொன்றது ஏன்? appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Melakuppam village ,Parangippet ,Marimuthu ,Periyappa ,
× RELATED பரங்கிப்பேட்டை அருகே பயங்கரம் இடப்பிரச்னையில் முதியவர் அடித்து கொலை