×

கடல் மீது ஊஞ்சலாடிய கடற்கன்னி

அமலாபாலிடம் அதிக படங்கள் கைவசம் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் தன்னைவிட்டு அகலாதபடி எப்படி பார்த்துக்கொள்வது என்ற வித்தையை கற்று வைத்திருக்கிறார். அதற்காக அவர் இணைய தளத்தை பயன்படுத்திக்கொள்கிறார். வித்தியாசமான படங்களையும், கருத்துக்களையும் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்புகிறார்.

சமீபத்தில் இந்தோனேஷியா பாலி தீவுக்கு சென்ற அமலாபால், கடற்கரை பகுதியில்  உல்லாசமாக சுற்றித்திரிந்து பொழுதை கழித்தார். பூங்காவில் மரத்தில் ஊஞ்சல் கட்டித் தான் ஊஞ்சலாடுவதை பார்த்திருக்கிறோம். இவர் கடல் மீது ஊஞ்சலாடியபடி புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கிறார்.

நீல நிற கடலில் அலைகள் வெண்மை நுரையுடன் பொங்கி வர அமலாபால் நீல நிற உடை அணிந்து மல்லார்ந்து படுத்தபடி ஊஞ்சல் ஆடும் அழகு கவர்ச்சி விருந்தாக அமைந்திருக்கிறது. ‘என் வாழ்வில் இதுவரை பார்க்காத அழகான சூர்ய அஸ்தமனத்தை பாலி கடலில் கண்டுமகிழ்ந்தேன்’ என குறிப்பிட்டிருப்பதுடன்,  ‘எனக்கு இதுவரை ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என மெசேஜும் பகிர்ந்திருக்கிறார் அமலாபால்.

Tags : Beachy ,sea ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...