×

நான் உருவாக்கிய குஜராத்: மோடி புதிய பிரசார கோஷம்

நானா போந்தா: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசார கூட்டத்தில், ‘நான் உருவாக்கிய குஜராத்’  என்ற புதிய கோஷத்தை   பிரதமர் மோடி அறிவித்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த மாநிலத்தில் முதன்முறையாக பிரதமர் மோடி நேற்று  பிரசாரம் செய்ய வந்தார்.  வல்சாட் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘இந்த தேர்தலில் குஜராத் பற்றி அவதுாறு கிளப்பியர்கள், கேலி செய்தவர்கள் அனைவரும் மாநிலத்தை விட்டே விரட்டப்படுவார்கள். கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தின் பெருமையை சிதைக்க முயன்ற சக்திகளுக்கு, இந்த தேர்தலிலும் அதே நிலைமை ஏற்படும்.  நான் டெல்லியில் இருக்கும்போது எனக்கு குஜராத் தேர்தல் நிலவரம் பற்றிய புள்ளி விவரங்கள் வந்தன. அதனை தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில்  அதிக இடங்களை பிடித்து பாஜ சாதனை புரியும். முந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்றதை விட அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். தேர்தல் பிரசாரத்துக்காக  எவ்வளவு நாட்கள் ஒதுக்க வேண்டுமானாலும்  தயாராக இருக்கிறேன்,’ என்றார். இந்த பிரசார கூட்டத்தில், ‘நான் உருவாக்கிய குஜராத்’ என்ற கோஷத்தை  குஜராத்தி மொழியில் அவர் அறிவித்தார். இதில், 25 நிமிடங்கள் அவர் பேசினார். அதில் பெரும்பாலான நேரம், இந்த கோஷத்தை அவர் முழங்கினார். அதோடு, கூட்டத்துக்கு வந்திருந்த மக்களையும் அதை திருப்பி கூறும்படி வலியுறுத்தினார்….

The post நான் உருவாக்கிய குஜராத்: மோடி புதிய பிரசார கோஷம் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Modi ,Nana Bonda ,Gujarat assembly election ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்