சென்னை: அம்பத்தூர் பகுதிகளில் 14 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.11.29 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதுகுறித்து, தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின், அமலாக்க அதிகாரிகள் அம்பத்தூர் பகுதியில் கடந்த 11ம் தேதி கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 14 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகர்வோருக்கு ரூ.10,30,539 இழப்பீட்டு தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.99,000 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்’என தெரிவிக்கப்பட்டுள்ளது….
The post 14 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு; ரூ.11.29 லட்சம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.