×

மூசோவாலாவை சுட்டு கொன்ற 2 பேர் கைது: உதவிய நபரும் சிக்கினார்

புதுடெல்லி: பஞ்சாபில் காங்கிரஸ் பிரமுகர் மூசேவாலா கொலை வழக்கு தொடர்பாக அவரை துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேர் உட்பட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்து மூசேவாலா மே 29ம் தேதி மர்மநபர்களால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோயை கடந்த வாரம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். மூசேவாலா கொலை சம்பவத்துக்கு கனடாவை சேர்ந்த பிரபல தாதா கோல்டி பிரார் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மூசேவாலா கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அரியானாவின் சோனிப்பட்டை சேர்ந்த பிரியாவ்ராத் (26), ஜஜ்ஜார் மாவட்டத்தை சேர்ந்த காசிஷ், பஞ்சாபின் பாதின்டாவை சேர்ந்த கேசவ் குமார்(29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூசேவாலாவை சுட்டுக்கொன்ற கும்பலுக்கு பிரியாவ்ராத் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கனடாவை சேர்ந்த தாதா கோல்டி பிராருடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தள்ளது. பிரியாவ்ராத் தான்  கொலையை அரங்கேற்றியதாகவும், மூசேவாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்….

The post மூசோவாலாவை சுட்டு கொன்ற 2 பேர் கைது: உதவிய நபரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Musowala ,New Delhi ,Congress ,Moosewala ,Punjab ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...