மன்னார்குடி; மன்னார்குடி அருகே உள்ள வடுவூரில் பிரசித்தி பெற்ற வைணவ தலமான கோதண்டராமசாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. ஐப்பசி மாதத்தை முன்னிட்டு இந்த ஊஞ்சல் உற் சவம் ஒரு வாரம் நடத்தப் பட்டது. தினமும் இரவு கோதண்டராமசாமி சீதாதேவி தாயாருடன் புறப்பட்டு கோயிலில் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். அப்போது அவருக்கு பலவிதமான பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்னிசை கச்சேரிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோதண்டராமர், சீதாதேவி தாயாரையும் தரிசனம் செய்தனர்.