×

பைக் திருடிய 2 பேர் கைது 4 வாகனங்கள் பறிமுதல்-முதலியார்பேட்டை போலீசார் அதிரடி

புதுச்சேரி :  புதுச்சேரி முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை, குற்றப்பிரிவு போலீசார் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் சந்தேகப்படும் வகையில் பைக்கை தள்ளிக்கொண்டு சென்றனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, அது திருட்டு பைக் என தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் (37), சங்கர் (37) என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து முதலியார்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பைக், உருளையன்பேட்டை மற்றும் நெட்டப்பாக்கம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒரு பைக் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.5 லட்சம் இருக்கும். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post பைக் திருடிய 2 பேர் கைது 4 வாகனங்கள் பறிமுதல்-முதலியார்பேட்டை போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Mudiyarpet police ,Puducherry ,Mudaliarpet ,Inspector ,Inian ,Special Task Force ,Mudaliarpet Police ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!