×

கோவிந்தசாமி நகரில் இடித்த வீடுகளை மீண்டும் கட்டித்தர உதவி செய்வோம்: அண்ணாமலை பேட்டி

சென்னை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:குடிசை மாற்று வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடமாக ராஜாஅண்ணாமலை புரம், கோவிந்தசாமி நகர் உள்ளது. ஒரு தனிப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு பாதை வேண்டும் என்பதற்காக இந்த பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்து இருக்கிறார்கள். இப்போது அவசரம், அவசரமாக இந்த இடத்தில் உள்ள வீடுகளை இடித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் சென்னைக்குள் அகதிகளாக மக்களை மாநில அரசு ஏற்படுத்திகொடுத்திருக்கிறது.பாஜ இங்குள்ள மக்களை கவர்னரிடம் அழைத்து சென்று தீர்வு காண்போம். கவர்னர் மூலமாக தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்டு, இனியும் வீடுகள் இடிக்கப்படாமல் இருப்பதற்கும், இடித்த வீடுகளை மீண்டும் கட்டித்தருவதற்கும் உதவி செய்வோம்….

The post கோவிந்தசாமி நகரில் இடித்த வீடுகளை மீண்டும் கட்டித்தர உதவி செய்வோம்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Govindasamy ,Anamalai ,Chennai ,Baja ,RajaAnamalai Puram ,Govindasamy Nagar ,Cottage Alternative Board ,
× RELATED நாய் கடித்து மான் சாவு