×

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் : ரூபி மனோகரன் பேட்டி

தாம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளராக ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, நேற்று கிழக்கு தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கிழக்கு தாம்பரம், பாரதமாதா தெருவில் உள்ள காமராஜர் சிலை, தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை, தாம்பரம் மார்க்கெட் பகுதி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு ரூபி மனோகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் நிருபர்களிடம் ரூபி மனோகரன் கூறியதாவது:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளராக பதவி வழங்கிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரசில் கடந்த 10 ஆண்டுகளாக பதவிகள் நிரப்பப்படவில்லை. தற்போது தமிழக அளவில் அதிகமான தொண்டர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும். வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் தொழில்துறை, கல்வித்துறை உள்பட எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை. அதிமுக ஆட்சியில் மக்கள் வெறுத்து போயிருக்கின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு ரூபி மனோகரன் கூறினார்….

The post வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் : ரூபி மனோகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Congress alliance ,Ruby Manokaran ,Tambaram, ,Tamil Nadu Congress ,East Tampara ,Thimu-Congress Alliance ,Election ,Dinakaran ,
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...