×

“ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கிறேன்”: நாங்குநேரியில் தேர்தல் பணி நடைபெறவில்லை என்ற புகாருக்கு ரூபி மனோகரன் மறுப்பு..!!

திருநெல்வேலி: நாங்குநேரியில் தேர்தல் பணி நடைபெறவில்லை என்ற புகாருக்கு ரூபி மனோகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். நாங்குநேரி காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி மேலிடத்திற்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில், நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங். வேட்பாளருக்கு எதிராக செயல்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. நெல்லையில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தோற்க ரூபி மனோகரன் வேலை பார்க்கிறார். எங்கள் தொகுதியில் ராபர்ட் புரூஸ்க்கு தேர்தல் பணி நடைபெறவில்லை. நாங்குநேரியில் சுவர் விளம்பரம், பிட் நோட்டீஸ், தெரு பிரச்சாரம் இல்லை. நெல்லையில் ராபர்ட் புரூஸ் தோற்றால் நாங்கள் பொறுப்பல்ல.

ரூபி மனோகரனால் நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைமைக்கு எழுதியுள்ள கடிதத்தில் நாங்குநேரி காங்கிரசார் பரபரப்பு தகவல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நாங்குநேரியில் தேர்தல் பணி நடைபெறவில்லை என்ற புகாருக்கு நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு எதிரான கோஷ்டி திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகிறது. நெல்லையில் ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கிறேன். நாங்குநேரியில் சுவர் விளம்பரம், பிட் நோட்டீஸ், தெரு பிரச்சாரம் நடைபெறுகிறது என்று ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

The post “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கிறேன்”: நாங்குநேரியில் தேர்தல் பணி நடைபெறவில்லை என்ற புகாருக்கு ரூபி மனோகரன் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Robert Prause ,Ruby Manokaran ,Tirunelveli ,Nanguneri ,Nanguneri Congress ,Delhi ,MLA ,Ruby Manokaran Kang ,Dinakaran ,
× RELATED காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸை...