×

வெவ்வேறு இடங்களில் வீடுகளை உடைத்து கொள்ளை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கீரப்பாக்கத்தில் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சி அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (45). மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மாதேஸ்வரி (42). வடபழனியில் உள்ள அரசு வங்கியில் வேலை செய்கிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். பிள்ளைகள், வண்டலூரில் உள்ள பள்ளிக்கு சென்றனர். பள்ளி முடிந்து பிள்ளைகள் மதியம் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு இருந்தது. உடனே, அருகில் வசிப்பவர்களிடம் செல்போன் வாங்கி, அதன் மூலம் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அருணாசலம் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது பீரோவை கடப்பாறையால் உடைத்து, அதில் இருந்த 7 சவரன் நகை, ரூ.60 ஆயிரம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் லட்சுமி நாராயணன் (40). இவரது மனைவி எழிலரசி. நேற்று முன்தினம் லட்சுமி நாராயணன், மனைவியுடன் கொடைக்கானல் சென்றார். நேற்று வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 சவரன் நகை, ரூ.90 ஆயிரம், மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post வெவ்வேறு இடங்களில் வீடுகளை உடைத்து கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kooduwancheri ,Kierapakam ,Vandalur ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை