×

ரூ.1.50 கோடி வாடகை பாக்கி கடைகளுக்கு அதிரடி சீல்

அண்ணாநகர்: அமைந்தகரை அபிபுல்லா சாலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 கடைகள் கடந்த ஒரு வருடமாக வாடகை செலுத்தாமல் இயங்கி வந்தது.  கடைகளின் வாடகை பாக்கி மட்டும் ரூ.1.50 கோடி. இந்நிலையில், அமைந்தகரை 8வது மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் லட்சுமணன், ரவிச்சந்திரன் மற்றும் உரிமம் ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால், சில கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அமைந்தகரை போலீசார் கடைகாரர்களுடன்  பேசி  சமாதானம் செய்தனர். அதன் பின்னர்,  41 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. …

The post ரூ.1.50 கோடி வாடகை பாக்கி கடைகளுக்கு அதிரடி சீல் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Nadalkarai Abibulla Road ,Dinakaran ,
× RELATED போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும்...