×

பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பக்வந்த் மான் பதவியேற்பு : ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!!

அமிர்தசரஸ்: பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து, இக்கட்சியை சேர்ந்த பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்விக கிராமமான ஷாகித் பகத்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கட்கர்கலனில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில்,துரி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற பகவந்த் சிங் மான் புதிய முதல்வராக பதவி ஏற்று கொண்டார். அவருக்கு  அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பக்வந்த் மான், பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதல்வர் ஆவார்.இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் மூத்த தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம்  போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். …

The post பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பக்வந்த் மான் பதவியேற்பு : ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Aam Aadmy Party ,Chief Minister ,Punjab ,Governor ,BANWARAL ,Amirthasaras ,Aam Aadmi Party ,Chief of State ,Panwaril ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...