×

திண்டுக்கல் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து மருத்துவ மாணவி தற்கொலை: மேற்படிப்பு படிக்கக் கூறியதால் விபரீதம்

குஜிலியம்பாறை: திண்டுக்கல் அருகே கத்தியால் கழுத்தறுத்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் மருத்துவ மேற்படிப்பு படிக்க சொன்னதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அண்ணா நகரை சேர்ந்த தம்பதி பால்ராஜ் – அகிலா. இவர்களது மகள் நிவேதா (22). 17 வயதில் ஒரு மகனும் உள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில், நிவேதா எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தார். உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவேதா விடுப்பில் வடமதுரைக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை பெற்றோர் வெளியில் சென்று விட்டனர். வீட்டில் நிவேதா, அவரது தம்பி மட்டும் இருந்தனர்.அப்போது குளியலறைக்குள் சென்ற நிவேதா, கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு குளியலறைக்குச் சென்று பார்த்த தம்பி, ரத்த வெள்ளத்தில் கிடந்த நிவேதாவை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் நிவேதாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நிவேதா வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்து வந்த நிவேதாவிடம் மருத்துவ மேற்படிப்பு படிக்க அவரது பெற்றோர் கூறியுள்ளனர். மருத்துவ இறுதியாண்டு படிப்பு படிக்கவே மிகவும் கஷ்டமாக  உள்ளது எனவும், இதில் தந்தை மருத்துவ மேற்படிப்பு படிக்க சொல்கிறாரே என உறவினர்களிடம் நிவேதா புலம்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பயத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்….

The post திண்டுக்கல் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து மருத்துவ மாணவி தற்கொலை: மேற்படிப்பு படிக்கக் கூறியதால் விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Thintukal ,Gujiliyampara ,Thintugul ,
× RELATED காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு...