×

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது: போக்குவரத்துத்துறை

சென்னை: காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்.மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்துள்ளது.

The post காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது: போக்குவரத்துத்துறை appeared first on Dinakaran.

Tags : Transport Dept. Chennai ,department ,Tuticorin ,Transport Department ,
× RELATED தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல்...