×

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

 

செங்கல்பட்டு, ஆக. 4: நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக 2 எண்ணிக்கை பணிபுரிய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்களின் தகுதி பணி விவரங்கள் ஆகிய வற்றை https://chengalpattu.dcourts.gov.in இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் https://chengalpattu.dcourts. gov.in இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்டு 14.8.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Permanent People's Court ,Chengalpattu ,Principal District Sessions ,District Legal Services Commission ,Principal ,District Sessions ,Chandrasekaran… ,Dinakaran ,
× RELATED உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்