கிருஷ்ணகிரி, ஆக.1: கிருஷ்ணகிரி அடுத்த ராமாபுரம் ஜக்காரப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ் (37). கூலி தொழிலாளியான இவர், கடந்த 5 வருடமாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், பையனப்பள்ளி பகுதியில் உள்ள மசூத் என்பவரது விவசாய கிணற்றில் ராஜேஷ் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. இதில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார், ராஜேசின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ராஜேஷின் தாய் மல்லிகா கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு appeared first on Dinakaran.
