×

குழந்தைகளுடன் இளம்பெண் கடத்தல்

கிருஷ்ணகிரி, டிச.17: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மஞ்சுநாதா லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரன் (35). தனியார் நிறுவன ஊழியரான இவரது மனைவி விஜயா (23). இவர்களுக்கு 6 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளனர். கடந்த 13ம் தேதி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற விஜயா, பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரித்ததில், அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் திருப்பத்தூரைச் சேர்ந்த குறளரசன்(33) என்பவருடன், விஜயாக்கு ஏற்கனவே பழக்கம் இருந்தது தெரியவந்தது. அவர் மனைவி, குழந்தைகளை கடத்தி சென்றிருக்கலாம் என ருத்ரன், சூளகிரி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Rudran ,Manjunatha Layout ,Soolagiri, Krishnagiri district ,Vijaya ,
× RELATED பைக் கவிழ்ந்து வாலிபர் பலி