
சென்னை: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 1,960 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக ஜூலை 25, 26 மற்றும் 27 (வெள்ளி – ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு,
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து
திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 25, 26 தேதிகளில் 650 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து
திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 25, 26 தேதிகளில் 110 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சென்னை மாதாவரத்திலிருந்து
25, 26 ஆகிய தேதிகளில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
The post வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 1,960 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.
