போடி, ஜூன் 12: போடி முத்துப்பாண்டி தெருவை சேர்ந்தவர் தசரதன்(41). இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக போடி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ கிருஷ்ணவேணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் தசரதன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தார். அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post புகையிலை விற்றவர் கைது appeared first on Dinakaran.
