திண்டுக்கல், மே 22: திண்டுக்கல் அருகே முத்தழகுபட்டியை சேர்ந்தவர் பாக்யராஜ் (24). கூலித்தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஷ்யாம் ஆகியோர் நேற்று முன்தினம் முத்தழகுபட்டி அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முத்தழகுபட்டியை சேர்ந்த கிஷோர் வேளாங்கண்ணி (24) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பாக்யராஜ் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.800 பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டார். இதுகுறித்து பாக்யராஜ் திண்டுக்கல் தாலுகா போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணியை கைது செய்தனர்.
The post திண்டுக்கல் அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.
