அரூர், மே 22: அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மொரப்பூர் ஊராட்சி மோட்டூர் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சம்பத்குமார் எம்எல்ஏ கலந்துகொண்டு பயணியர் நிழற்கூடத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மொரப்பூர் ஒன்றிய அதிமுக செயலாளர் செல்வம், அரூர் ஒன்றிய செயலாளர் பசுபதி, கம்பைநல்லூர் நகர செயலாளர் தனபால், அரூர் நகர செயலாளர் பாபு, ஒன்றிய அவைத்தலைவர் அன்சார், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராம ஜெயம், சென்னையன், சுகதேவ், செல்வம், ஆறுமுகம், கவிரஜி, நேதாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா appeared first on Dinakaran.
