×

விவசாயி வீட்டின் முன் நிறுத்தியிருந்த 2 டூவீலர்கள் எரிப்பு

காரிமங்கலம், மே 21: காரிமங்கலம் அடுத்த செல்லமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ராஜா(52). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது டூவீலர்களை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு தூங்கச்சென்றார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. உடனே வெளியே வந்து பார்த்தபோது, அவரது 2 டூவீலர்களும் தீப்பற்றி எரிந்துகொண்டு இருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் எரிந்துகொண்டு இருந்த டூவீலர்கள் மீது தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தார். ஆனால் அதற்குள் ஒரு டூவீலர் முற்றிலுமாக எரிந்துபோனது. மற்றொரு டூவீலர் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து ராஜா காரிமங்கலம் ேபாலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, டூவீலர்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விவசாயி வீட்டின் முன் நிறுத்தியிருந்த 2 டூவீலர்கள் எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Murugesan ,Chellamarampatti ,Raja ,
× RELATED வத்திராயிருப்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி