×

பிளஸ்1 பொதுத்தேர்வில் 5வது இடத்துக்கு தூத்துக்குடி முன்னேற்றம்

தூத்துக்குடி, மே 17: பிளஸ்1 பொதுத்தேர்வு தேர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வை 208 பள்ளிகளை சேர்ந்த 8702 மாணவர்கள், 10,755 மாணவிகள் என மொத்தம் 19,457 பேர் எழுதினர். இதில் 8,011 மாணவர்கள், 10,486 மாணவிகள் என 18,497 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.07 சதவீத தேர்ச்சியாகும். மாவட்டத்தில் அரசு பள்ளிகளை பொறுத்தவரை 91.86 சதவீத மாணவ, மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 93.52 சதவீத மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்1 தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் கடந்த ஆண்டு 93.86 சதவீத தேர்ச்சி பெற்று 10வது இடத்தை பிடித்திருந்த நிலையில் தற்போது 95.07 சதவீத தேர்ச்சி பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பிளஸ்1 பொதுத்தேர்வில் 5வது இடத்துக்கு தூத்துக்குடி முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா