திருவாரூர் மே 6: திருவாரூர் வடக்குவடம் போக்கி தெருவில் வசித்து வந்தவர் முருகானந்தம் மகன் மணிமாறன் (29). ஏசி மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் இரவு வண்டிக்கார தெருவில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவர் வீட்டில் பழுதான ஏசியினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியதில் மெக்கானிக் மணிமாறன் தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மணிமாறன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது மனைவி துர்கா என்பவர் அளித்த புகாரின்பேரில் திருவாரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் பலி appeared first on Dinakaran.
