சென்னை: பள்ளிகளில் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ‘தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக கழிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன.
இதற்கிடையே சென்னை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது. விடுமுறை நாட்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. இதையும் மீறி வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
The post பள்ளிகளில் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.
