புதுக்கோட்டை, ஏப்.11: புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகளைஒருங்கிணைந்த முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண்துறை தெரிவித்துள்ளதாவது: சிவப்பு கூன்வண்டின் புழுக்கள் மரத்தின் தண்டு பகுதிகளை உள்ளிருந்து துளைத்து மென்று தின்று சக்கைகளாக வெளியேற்றுவதால் குருத்து பகுதி பாதிக்கப்பட்டு மரம் ஒடித்துவிழுந்து சேதம் விளைவிக்கும். இதனால் பொருளாதார சேதம்ஏற்படுகிறது. எனவே, சிவப்பு கூன்வண்டுகளை ஒருங்கிணைந்தமுறையில் கட்டுப்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சிவப்பு கூன்வண்டு மேலாண்மை முறைகள்: மரத்தின் காயங்களில் கூன்வண்டுகள் முட்டையிடுவதால் மரங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்கிய இடத்திலும் கூன்வண்டுகள் முட்டையிடுவதால் காண்டாமிருக வண்டுகள்தாக்குதலை முறையாக கட்டுப்படுத்த வேண்டும் பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்கவும், அவசியம்ஏற்பட்டால் தண்டுப்பகுதியிலிருந்து 3 அடி தள்ளி வெட்டவும். இடிதாக்கிய மரங்கள் மற்றும் கூன்வண்டு தாக்கிய மரங்கள்ஆகியவை கூன்வண்டுகளின் வாழ்விடம் என்பதால்அம்மரங்களை வெட்டி தீயிட்டு எரிக்கவும்.
கரும்புச்சாறு 2 ½ லிட்டர், ஈஸ்ட் மாத்திரை 5 கிராம், 5 மிலி அசிட்டிக் அமிலம், நீளவாக்கில் வெட்டப்பட்டதென்னை இலை மட்டை துண்டு போடப்பட்ட பானைகளைஏக்கருக்கு 30 வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கவேண்டும். பெர்ரோலியூர் கவர்ச்சிப்பொறிகளை எக்டருக்கு ஒன்றுவீதம் வைத்து சிவப்புக் கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கவும். கவர்ச்சிப்பொறியில் கவரப்படும் வண்டுகளை அவ்வப்போதுகண்காணித்து அழிக்க வேண்டும். கவர்ச்சிப்பொறிகளை தென்னை மரத்திலோ அல்லதுஓலைகளிலோ கட்டி வைத்தலைத் தவிர்க்கவும்.
கவர்ச்சிப்பொறியில் உள்ள மூலப்பொருளின் திறன்படிப்படியாகக் குறைந்து வரும் என்பதால் மூன்றுமாதங்களுக்கு ஒருமுறை பொறிகளில் உள்ள மருந்தினைமாற்ற வேண்டும். அதிகப்படியாக சேதமான இடங்களில் மரம் முற்றிலும்பாதிப்படைந்தால் மட்டும், வேரின் மூலம் மருந்து செலுத்திகட்டுப்படுத்தலாம். 7-செ.மீ-க்கு 10 செ.மீ. அளவுள்ளபாலித்தீன் பையில், 10 மி.லி. மோனோகுரோட்டபாஸ் 36 டபுள்யு எஸ் சி என்ற மருந்துடன் 10 மி.லி. நீரினை கலந்துசேர்த்த, இக்கலவையில் புதிய வேரினைத் தேர்வு செய்துசாய்வாகக் கூர்மையாக வெட்டி அவ்வேரில் படுமாறு இறுகக்கட்ட வேண்டும். மருந்து செலுத்தப்பட்ட மரங்களில் இருந்து 45 நாட்களுக்குபிறகே காய்களை அறுவடை செய்ய வேண்டும் கூன்வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரங்களை தோப்புகளிலேயே விட்டு வைப்பது காண்டாமிருக வண்டுகளின் இனப்பெருக்கத்திற்கும் வழிவகுப்பதால் பாதிக்கப்பட்ட மரங்களை தோப்பில் இருந்து நீக்குவதே இவ்விரு வண்டுகளின் தாக்குதலை குறைக்கும் முக்கியவழி முறையாகும்.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என புதுக்கோட்டைமாவட்ட வேளாண்மை துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
The post தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் சிவப்பு கூன்வண்டுகள் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் appeared first on Dinakaran.
