×

சென்னையில் திடீரென்று ெபய்த மழை காரணமாக 20 விமானங்கள் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

பூந்தமல்லி, ஏப்.17: திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென்று பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. மும்பையில் இருந்து 145 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து 160 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கவுகாத்தியிலிருந்து, 138 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பெங்களூரில் இருந்து 125 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் உள்பட 10க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன. இதனிடையே, மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. அதைப்போல் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொச்சி, கோவை, தோகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post சென்னையில் திடீரென்று ெபய்த மழை காரணமாக 20 விமானங்கள் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Poonamallee ,Chennai airport ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருப்படி திருவிழா